என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன்னார்குடி அருகே வாய்க்காலில் வாலிபர் பிணம்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்28 Jan 2021 7:33 AM GMT (Updated: 28 Jan 2021 7:33 AM GMT)
மன்னார்குடி அருகே வாய்க்காலில் வாலிபர் பிணம் கிடந்தது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி:
மன்னார்குடியை அடுத்த மெய்பழத்தோட்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). நேற்றுமுன்தினம் இவர் அதே பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள திருமேனி ஏரி வாய்க்காலில் சுரேஷ் பிணமாக கிடந்துள்ளார். இ்தனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்மோகனுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X