search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடந்ததை படத்தில் காணலாம்.
    X
    மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடந்ததை படத்தில் காணலாம்.

    சேவூர் அருகே மொண்டிபாளையம் பெருமாள்கோவில் தேரோட்டம்

    சேவூர் அருகே மொண்டிபாளையம் பெருமாள்கோவில் தேரோட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
    சேவூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் "மேல திருப்பதி" எனப் போற்றப்படுவதுமான மொண்டிபாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் கோவில் தை தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளும் ரத தரிசனம் நடைபெற்றது. மதியம் 12.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, "கோவிந்தா' என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதியம் 2.30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இன்று (வியாழக்கிழமை) பரிவேட்டை, குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா வரும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நாளை காலை சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும், இரவு தெப்பத்தேர் திருவிழாவும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) மகா திருமஞ்சனம், மகா தரிசனம், கொடியிறக்குதல், மஞ்சள் நீராடுதல், மகா தீபாராதனையுடன் விழா நிறைவடைகிறது.
    Next Story
    ×