என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி பள்ளியில் தேசிய கொடி ஏற்றி வைத்த திருநங்கை
Byமாலை மலர்27 Jan 2021 6:13 PM GMT (Updated: 27 Jan 2021 6:13 PM GMT)
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் தற்காலிக வாகன டிரைவராக பணிபுரியும் திருநங்கை எம்.சினேகா தேசத்தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திருச்சி:
திருச்சி தென்னூரில் உள்ள சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட திட்ட அலுவலகத்தில், ஊரக வாழ்வாதார இயக்கத்தில் தற்காலிக வாகன டிரைவராக பணிபுரியும் திருநங்கை எம்.சினேகா தேசத்தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து வணங்கினார். திருநங்கை சினேகா பேசும்போது, ‘ஆசிரியர்கள் தான் நாம் அனைவருக்கும் முன் உதாரணமாக விளங்க கூடியவர்கள். நாம் கொண்ட லட்சியத்தில் உறுதியாக இருந்தால் வாழ்வில் முன்னேறலாம். எங்களை போல உள்ளவர்களுக்கு இவ்வாய்ப்பு கிடைப்பது நாங்கள் மென்மேலும் தன்னம்பிக்கையுடன் அடுத்த இடத்திற்கு செல்ல உதவும் என நம்புகிறேன்' என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X