search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா
    X
    சசிகலா

    பிப்ரவரி முதல் வாரத்தில் சசிகலா சென்னை திரும்புவார்- உறவினர் ஜெய்ஆனந்த் தகவல்

    சசிகலா பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சென்னை திரும்புகிறார் என்று அவரது உறவினர் ஜெய் ஆனந்த் கூறினார்.
    சென்னை:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டுள்ள சசிகலா கொரோனா தொற்று காரணமாக பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு ஒரு வாரமே ஆகியுள்ளதால் அவர் இன்னும் சில நாட்கள் பெங்களூரிலேயே தங்கி சிகிச்சை பெறுகிறார்.

    இந்தநிலையில் சசிகலா பிப்ரவரி மாதம் சென்னை திரும்ப இருக்கிறார். இது தொடர்பாக சசிகலாவின் உறவினர் ஜெய் ஆனந்த் கூறியதாவது:-

    கொரோனா பாதிப்பு இருப்பதால் சசிகலா பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறுவார். சசிகலாவுக்கு கொரோனா தொற்று காலக்கெடு வருகிற 31-ந்தேதி நிறைவு பெறும்.

    எனவே சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆனாலும் தொடர்ந்து பெங்களூரிலேயே தங்கி இருப்பார். அவர் பிப்ரவரி மாதம் முதல்வாரம் சென்னை திரும்புகிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×