என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வில்லுக்குறி அருகே லாரி மீது கார் மோதல்- என்ஜினீயரிங் மாணவர் பலி
இரணியல்:
தென்காசி மாவட்டம் குற்றாலம் மேலகரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் சலீம். இவரது மனைவி மன்சூரா (வயது46). இவர்களது மகன் முகம்மது ஆதம்பா (22), மகள்கள் பாத்திமா (20), சகிலா (18).
சலீம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். மகன் முகம்மது ஆதம்பா என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்நிலையில் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மன்சூராவின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார்.
அதுதொடர்பாக துக்கம் விசாரிக்க மன்சூரா தனது மகன் முகம்மது ஆதம்பா, மகள்கள் பாத்திமா, சகிலா ஆகியோருடன் காரில் மார்த்தாண்டத்திற்கு சென்றார். காரை சங்கரன் கோவிலை சேர்ந்த கார்த்திகேயன் (30) என்பவர் ஓட்டிவந்தார்.
அவர்களது கார் இன்று காலை குமரி மாவட்டம் வில்லுக்குறி காரவிளை பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அவர்களுக்கு முன்னால் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சிமெண்ட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அப்போது லாரியின் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார்.
இதனால் பின்னால் வந்த கார், லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன் பகுதியில் இடது புற இருக்கையில் அமர்ந்திருந்த முகம்மது ஆதம்பா படுகாயம் அடைந்தார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது தாய் மற்றும் சகோதரிகளும் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த முகம்மது ஆதம்பா தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் காயம் அடைந்த மன்சூரா மற்றும் அவரது மகள்கள் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் சுங்கான்கடை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து கார் டிரைவர் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்