search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    வில்லுக்குறி அருகே லாரி மீது கார் மோதல்- என்ஜினீயரிங் மாணவர் பலி

    வில்லுக்குறி அருகே விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல்:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் மேலகரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் சலீம். இவரது மனைவி மன்சூரா (வயது46). இவர்களது மகன் முகம்மது ஆதம்பா (22), மகள்கள் பாத்திமா (20), சகிலா (18).

    சலீம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். மகன் முகம்மது ஆதம்பா என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்நிலையில் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மன்சூராவின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார்.

    அதுதொடர்பாக துக்கம் விசாரிக்க மன்சூரா தனது மகன் முகம்மது ஆதம்பா, மகள்கள் பாத்திமா, சகிலா ஆகியோருடன் காரில் மார்த்தாண்டத்திற்கு சென்றார். காரை சங்கரன் கோவிலை சேர்ந்த கார்த்திகேயன் (30) என்பவர் ஓட்டிவந்தார்.

    அவர்களது கார் இன்று காலை குமரி மாவட்டம் வில்லுக்குறி காரவிளை பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அவர்களுக்கு முன்னால் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சிமெண்ட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அப்போது லாரியின் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார்.

    இதனால் பின்னால் வந்த கார், லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன் பகுதியில் இடது புற இருக்கையில் அமர்ந்திருந்த முகம்மது ஆதம்பா படுகாயம் அடைந்தார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது தாய் மற்றும் சகோதரிகளும் காயம் அடைந்தனர்.

    இந்த விபத்தை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த முகம்மது ஆதம்பா தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தில் காயம் அடைந்த மன்சூரா மற்றும் அவரது மகள்கள் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் சுங்கான்கடை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து கார் டிரைவர் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×