என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாராபுரம் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.1 லட்சம் பறிப்பு
Byமாலை மலர்27 Jan 2021 7:11 AM GMT (Updated: 27 Jan 2021 7:11 AM GMT)
தாராபுரம் அருகே டாஸ்மாக் ஊழியரை மதுபாட்டிலால் தாக்கி ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 310-ஐ பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
தாராபுரம்:
தாராபுரம் அருகே டாஸ்மாக் ஊழியரை மதுபாட்டிலால் தாக்கி ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 310-ஐ பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 46). இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்து, தச்சன்புதூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வழக்கம்போல விற்பனையை முடித்துகொண்டு டாஸ்மாக் கடையை சிவக்குமார் பூட்டினார். அதனைத்தொடர்ந்து கடையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததற்கான தொகை ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 310-த்தை தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்ரோல் டேங்க் கவரில் ஒரு பையில் வைத்துக்கொண்டு தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
தச்சன்புதூர்-பொள்ளாச்சி சாலை சந்திப்பு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது 3 பேர் கொண்ட கும்பல் திடீரென்று சிவக்குமாரை வழிமறித்தது. உடனே சிவக்குமார் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அந்த ஆசாமிகள் சிவக்குமாரிடம் உள்ள பணத்தை கொடுக்குமாறு கேட்டனர். அதற்கு சிவக்குமார் மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த 3 மர்ம ஆசாமிகளும் அருகில் கிடந்த மதுபாட்டில்களை எடுத்து சிவக்குமார் தலையில் தாக்கினர். இதில் சிவக்குமார் நிலைகுலைந்ததை அடுத்து அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 310-ஐ பையுடன் பறித்துச்சென்று விட்டனர்.
இதுபற்றி சிவக்குமார் தனது செல்போன் மூலம் தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தலையில் பலத்த காயத்துடன் இருந்த சிவக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.
சம்பவம் குறித்து தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X