என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
Byமாலை மலர்27 Jan 2021 6:53 AM GMT (Updated: 27 Jan 2021 7:06 AM GMT)
தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள நெடுஞ்சாலை பகுதியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரிகள் நிறுத்தப்படும் இடம் அருகே நின்றுகொண்டிருந்த சிலர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். அப்போது பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி (வயது 33), பிடமனேரி பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் ஆகியோர் போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது நெடுஞ்சாலை பகுதியில் தனியாக வருபவர்களை வழிமறித்து அவர்களிடம் இருக்கும் பணத்தை வழிப்பறி செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். வழிப்பறி கும்பலைச் சேர்ந்த மேலும் 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X