என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமாந்துறையில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
Byமாலை மலர்27 Jan 2021 6:29 AM GMT (Updated: 27 Jan 2021 6:29 AM GMT)
திருமாந்துறையில் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள், அருகே உள்ள ஷோரூமில் நிறுத்தப்பட்டிருந்த புதிய மோட்டார் சைக்கிளையும் திருடிச்சென்றனர்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையில் தேசிய நெடுஞ்சாலை அருகே செந்தில்குமார் என்பவர் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் வியாபாரம் முடிந்த பின்னர், நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மீண்டும் நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதேபோல் அந்த கடையின் அருகே உள்ள இருசக்கர வாகன விற்பனை நிறுவன ஷோரூமின் பூட்டையும் உடைத்து உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். மேலும் இந்த சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையில் தேசிய நெடுஞ்சாலை அருகே செந்தில்குமார் என்பவர் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் வியாபாரம் முடிந்த பின்னர், நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மீண்டும் நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதேபோல் அந்த கடையின் அருகே உள்ள இருசக்கர வாகன விற்பனை நிறுவன ஷோரூமின் பூட்டையும் உடைத்து உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். மேலும் இந்த சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X