என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா, நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்- முக ஸ்டாலின்
Byமாலை மலர்26 Jan 2021 1:40 PM GMT (Updated: 26 Jan 2021 1:40 PM GMT)
ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பது தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த மர்மத்தை வெளியிட இயலாத அ.தி.மு.க ஆட்சியாளர்கள், அவரது நினைவிடத்தை திறந்துவைக்க இருக்கிறார்கள்.
இந்தநிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பது தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம். 4 ஆண்டுகள் முடிந்தும் ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்திருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கவில்லை.
ஜெயலலிதாவின் உயிருக்கு உரிய நீதி வழங்க முன்வராத எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் நினைவிடத்தை திறக்க உரிமை உள்ளதா?
ஜெயலலிதா மரணத்தின் உண்மை வெளிச்சத்திற்கு வருவதை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கிறது அரசு. துணை முதல்வரான பிறகும் ஜெயலலிதா மரணத்துக்கான உண்மையை அறிய முற்பட்டாரா ஓபிஎஸ் என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணம், கொடநாடு சம்பவத்தில் தண்டனை பெற்றுத் தரப்படும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X