என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரக்கோணம் அருகே ஆற்றில் மூழ்கி 2 பெண்கள் பலி
Byமாலை மலர்26 Jan 2021 11:52 AM GMT (Updated: 26 Jan 2021 11:52 AM GMT)
அரக்கோணம் அருகே ஒரே தெருவை சேர்ந்த இரண்டு பெண்கள் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம்
அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரம், பழைய பள்ளிக்கூடம் தெருவை சார்ந்த மேகவர்ணம் மகள் இமையா (வயது 14). அதே தெருவை சேர்ந்த பஞ்சாட்சரம் மனைவி கோவிந்தம்மாள் (45). இவர்கள், அங்குள்ள கல் ஆற்று பகுதியில் நேற்று முன்தினம் மதியம் மாடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது இமையா ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை கண்ட கோவிந்தம்மாள், இமையாவை காப்பாற்ற ஆற்றில் இறங்கியபோது அவரும் நீரில் மூழ்கினார்.
இருவரும் ஆற்றில் மூழ்கி தத்தளிப்பதை கண்ட அங்கிருந்தவர்கள் உடனே, அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டது.
ஒரே தெருவை சேர்ந்த இரண்டு பெண்கள் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்திஉள்ளது. இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X