search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருவையாறு கார் மோதி தொழிலாளி பலி

    திருவையாறு அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவையாறு:

    திருவையாறை அடுத்த சடையாண்டிதோப்பை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது44). தொழிலாளி. இவர் நேற்று காலை சடையாண்டிதோப்பு மெயின்ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது திருக்காட்டுப்பள்ளியிலிருந்து திருவையாறு நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக ராஜமாணிக்கம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கதினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜமாணிக்கம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜம்புலிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×