என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைவாசல் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டி பலி
Byமாலை மலர்26 Jan 2021 9:06 AM GMT (Updated: 26 Jan 2021 9:06 AM GMT)
தலைவாசல் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைவாசல்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ராயப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி லட்சுமி (வயது 65). இவர் சம்பவத்தன்று தலைவாசல் அடுத்துள்ள ஆறகளூரில் துக்க நிகழ்ச்சிக்கு தனது மகன் பார்த்திபனுடன் வந்துள்ளார். பின்னர் இரவில் சைக்கிளில் அவர்கள் திரும்பினர். ஆனால் சைக்கிளை ஓட்ட முடியாததால், பார்த்திபன் தனது தாயை நடந்து வரக்கூறி விட்டு, சென்று விட்டார். ஆனால் இரவில் அவர் வீடு திரும்பவில்லை. பின்னர் காலையில் சென்று பார்த்த போது, லட்சுமி, பெரியேரி தனியார் மில் அருகில் செல்லும் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X