search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ராசிபுரம் அருகே இளம்பெண் தற்கொலை

    ராசிபுரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள அத்திப்பலகானூரை சேர்ந்தவர் மணிமலை. இவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த சவுமியா (வயது 19) என்ற பெண்ணை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2 மாதமாக மணிமலை, அவரது மனைவி சவுமியாவுடன் முத்துக்காளிப்பட்டி எஸ்.ஆர்.வி. கார்டன் அருகே செட்டியார் தோட்டத்தில் வசித்து வந்தார். மணிமலை தற்போது காற்றாலை ரெக்கை வண்டியில் குஜராத் சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த சவுமியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×