search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து
    X
    டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து

    நாகர்கோவிலில் டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து

    நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகில் அமைந்துள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகில் அமைந்துள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்து கொண்டு இருந்தனர். 

    அப்போது தீயணைப்பு படையினரும் அங்கு வந்தனர். அவர்களும் இணைந்து தீைய அணைத்தனர். இந்த சம்பவத்தால் சில நிமிடங்கள் மின் தடை செய்யப்பட்டது. டிரான்ஸ்பார்மரில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் அதன்மூலம் மீண்டும் மின்வினியோகம் செய்யப்பட்டது. அருகே கிடந்த குப்பையில் தீப்பற்றி, அது டிரான்ஸ்பார்மருக்கு பரவியிருக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மின்வாரிய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டதால் பெரிய தீவிபத்து தவிர்க்கப்பட்டது.

    Next Story
    ×