என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
10, 12-ம் வகுப்பு வினாவங்கி புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்
சென்னை:
கொரோனா தொற்று காரணமாக 10 மாதங்கள் கழித்து 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் கடந்த 19-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தகுந்த பாதுகாப்புடன் நடத்தப்படுகின்றன. நேரடி வகுப்பு இல்லாத நிலையில் ஆன்லைன் வழியாக படித்து வந்த மாணவர்களுக்கு பாடத் திட்டம் குறைக்கப்பட்டன.
பொதுத்தேர்வில் எளிதில் தேர்ச்சி பெற விரும்புவோர் குறைந்தபட்ச பாடத் திட்டத்தையும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத விரும்புவோர் ஏற்கனவே இருக்கும் பாடத் திட்டப்படி புத்தகங்களில் உள்ள அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை எளிமையாக படிக்கும் வகையில் அவர்களுக்கு வினா வங்கி தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அனைத்து பாடங்களுக்கும் வினாவங்கி தயாரிக்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பெற்றோர் ஆசிரியர் கழகம், தமிழக பாட நூல் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்