என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏலகிரிமலையில் பள்ளி மாணவியை கடத்திய 2 குழந்தைகளின் தந்தை கைது
Byமாலை மலர்25 Jan 2021 1:37 PM GMT (Updated: 25 Jan 2021 1:37 PM GMT)
ஏலகிரிமலையில் பள்ளி மாணவியை கடத்திய 2 குழந்தைகளின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கல்லாத்தூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் ராஜ்குமார் (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஏலகிரிமலையில் நிலாவூர் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவியை கடந்த 18-ந் தேதி ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக மாணவியின் தந்தை ஏலகிரி மலை போலீஸ் நிலைத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பஸ்நிலையத்தில் ராஜ்குமார் மற்றும் மாணவி ஆகிய இருவரும் நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி ஏலகிரிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சென்று இருவரையும் ஏலகிரிமலை போலீஸே் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இருவரும் சென்னையில் உள்ள வடபழனி கோவிலில் திருமணம் செய்துகொண்டு திருப்பதி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றியது தெரியவந்தது. மாணவியை பெற்றோருடன் அனுப்பிய போலீசார் ராஜ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X