search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சங்கராபுரம் அருகே டிரைவர் தீக்குளித்து தற்கொலை

    சங்கராபுரம் அருகே டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஞானபண்டிதன் மகன் ரவி (வயது 21). நெல் அறுவடை எந்திர டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் மஞ்சபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகள் அனுஷா(19) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை.

    சம்பவத்தன்று ரவி அவரது மனைவியை மஞ்சப்புத்தூரில் உள்ள மாமியார் வீட்டில் கொண்டு விட்டு விட்டு தனது ஊருக்கு புறப்பட்டு சென்றார். 3 நாட்களுக்கு பிறகு மனைவியை பார்ப்பதற்காக மது போதையில் மஞ்சப்புத்தூர் வந்த ரவியை அனுஷா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மனைவியை அடித்து உதைத்ததோடு தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த ரவியை அக்கம்பக்கத்தினர் மீ்ட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×