என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை-நாகை சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளம் சீரமைக்கப்படுமா?
Byமாலை மலர்25 Jan 2021 7:19 AM GMT (Updated: 25 Jan 2021 7:19 AM GMT)
தஞ்சை-நாகை சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலியமங்கலம்:
டெல்டா மாவட்ட பகுதிக்கு முக்கிய சாலையாக தஞ்சை-நாகை சாலை உள்ளது. இந்த சாலையை நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர் பகுதிக்கு சென்று வர பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி அன்னை ஆரோக்கிய மாதா பேராலயம் சென்று வர சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் தஞ்சை- நாகை சாலை பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் சாலையின் நடுவே ஆபத்தாக பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தஞ்சை-நாகை சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X