என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீச்சல் பழகியபோது குளத்தில் மூழ்கி 3 பேர் பலி
Byமாலை மலர்25 Jan 2021 1:57 AM GMT (Updated: 25 Jan 2021 1:57 AM GMT)
திண்டுக்கல் அருகே நீச்சல் பழகியபோது குளத்தில் மூழ்கி சிறுமிகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள காவேரிசெட்டியப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம். அவருடைய மனைவி ராதா (வயது 38). இவர், திண்டுக்கல் அபிராமி கூட்டுறவு பண்டகசாலையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் ராதா தனது மகள் பவ்யா (13) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகள் சரஸ்வதி (13) ஆகியோருடன் நேற்று அப்பகுதியில் உள்ள செங்குளத்துக்கு குளிக்க சென்றார்.
சிறுமிகள் இருவரும் குளத்தில் குளித்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு ராதா நீச்சல் கற்று கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமிகள் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ராதா ஈடுபட்டார். இதில் அவரும் தண்ணீரில் மூழ்கி விட்டார்.
குளத்தில் மூழ்கிய 3 பேரும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்ததை அறிந்த கிராம மக்கள் குளத்துக்கு விரைந்து சென்று 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ½ மணிநேர தேடுதலுக்கு பிறகு 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். அதாவது தண்ணீரில் மூழ்கிய 3 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள காவேரிசெட்டியப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம். அவருடைய மனைவி ராதா (வயது 38). இவர், திண்டுக்கல் அபிராமி கூட்டுறவு பண்டகசாலையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் ராதா தனது மகள் பவ்யா (13) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகள் சரஸ்வதி (13) ஆகியோருடன் நேற்று அப்பகுதியில் உள்ள செங்குளத்துக்கு குளிக்க சென்றார்.
சிறுமிகள் இருவரும் குளத்தில் குளித்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு ராதா நீச்சல் கற்று கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமிகள் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ராதா ஈடுபட்டார். இதில் அவரும் தண்ணீரில் மூழ்கி விட்டார்.
குளத்தில் மூழ்கிய 3 பேரும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்ததை அறிந்த கிராம மக்கள் குளத்துக்கு விரைந்து சென்று 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ½ மணிநேர தேடுதலுக்கு பிறகு 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். அதாவது தண்ணீரில் மூழ்கிய 3 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X