search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

    மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் மனம் உடைந்த ராஜேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    இடிகரை:

    பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள ஜோதிபுரம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 30). இவர் தனியார் கம்பெனியில் டிசைனிங் என்ஜினீயராக உள்ளார். இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில் ராஜேசுக்கும், ரம்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்துவந்துள்ளது. சம்பவத்தன்று ரம்யா கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மனம் உடைந்த ராஜேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×