search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வாங்கிய கடனை திரும்ப கேட்ட வாலிபர் மீது தாக்குதல் - ரவுடி உள்பட 2 பேர் மீது வழக்கு

    திருச்சி அருகே வாங்கிய கடனை திரும்ப கேட்ட வாலிபர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ரவுடி உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி கருமண்டபம் வசந்த் நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் செல்வகுமார் (வயது 28). இவரிடம் கருமண்டபத்தைச் சேர்ந்த தங்கராஜன் மனைவி கிருஷ்ணகுமாரி ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். அதற்கான அசல் மற்றும் வட்டியை அவர் திரும்ப கொடுக்கவில்லை. செல்வகுமார் அந்த பணத்தை பலமுறை கேட்டும் அவர் கொடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் கருமண்டபம் ஜே.பி. நகர் பகுதியில் செல்வகுமார் நின்றுகொண்டிருந்தார். அங்கு கிருஷ்ணகுமாரியின் மகன் குமரன் மற்றும் சமத்துவபுரத்தை சேர்ந்த ஹேமேஸ்வரன் ஆகியோர் வந்தனர். அப்போது இருவரும், செல்வகுமாரை அவதூறாக பேசியதுடன் அரிவாளால் பின்மண்டையில் தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. காயமடைந்த செல்வகுமார் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் குமரன் மற்றும் ஹேமேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்கள். போலீசாரால் தேடப்படும் குமரன் பிரபல ரவுடி ஆவார். அவர் மீது திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசில் கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி என 3 வழக்குகள் உள்ளது. இதுபோல கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை மிரட்டல் என வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×