search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கயத்தாறு அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

    கயத்தாறு அருகே வெள்ளை தேமல் நோயால் அவதிப்பட்டு வந்த வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள அய்யனார்ஊத்து கிராமம் கிணற்று தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் மொட்டைய சாமி (வயது 39). கருப்புகட்டி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு உடலில் வெள்ளை தேமல் நோயால் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர், நேற்று மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். மொட்டையசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மொட்டையசாமிக்கு, சீதாலட்சுமி (30) என்ற மனைவியும், விஜயபாலன் (12) என்ற மகனும், கார்த்திகா (6) என்ற மகளும் உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×