என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்கோவிலூர் அருகே டிராக்டர்கள் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்24 Jan 2021 10:47 AM GMT (Updated: 24 Jan 2021 10:47 AM GMT)
திருக்கோவிலூர் அருகே உழவு எந்திரத்துடன் டிராக்டர்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே கொழுந்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 58). இவருக்கு சொந்தமான டிராக்டரை உழவு எந்திரத்துடன் மர்மநபர் திருடிச்சென்றார். இது குறித்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் உத்திரவின் பேரின் மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஜா.சித்தாமூர் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக டிராக்டரில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் கொழுந்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 28) என்பதும், முரளிக்கு சொந்தமான டிராக்டருடன் கூடிய உழவு எந்திரம் மற்றும் வளவனூர் பகுதியில் கலில் என்பவருக்கு சொந்தமான டிராக்டரை திருடியதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 டாக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X