என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சங்கராபுரம் அருகே ஜவுளிக்கடை பெண் அதிபரிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்24 Jan 2021 10:06 AM GMT (Updated: 24 Jan 2021 10:06 AM GMT)
சங்கராபுரம் அருகே முகத்தில் மயக்கப்பொடி தூவி ஜவுளிக்கடை பெண் அதிபரிடம் நகை பறித்து சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிஷிவந்தியம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூர் கிராமத்தை சேர்ந்தவர் உமையன் பாலன். இவரது மனைவி பிலவின்ராணி (வயது 35). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று பிலவின்ராணி ஜவுளிக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது கடை முன்பு காரில் மர்ம நபர் ஒருவர் வந்து இறங்கினார்.
பின்னர் அந்த நபர் ஜவுளிக்கடைக்குள் சென்று பிலவின்ராணியிடம் துணி வாங்குவது போல் பேச்சு கொடுத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர் மயக்கப் பொடியை பிலவின்ராணி மீது தூவினார். இதில் அவர் மயக்கம் அடைந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர் பிலவின்ராணி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு காரில் மாயமாகி விட்டார்.
மயக்கம் தெளிந்து எழுந்த பிலவின்ராணி தனது கழுத்தில் கிடந்த நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் சங்கராபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூர் கிராமத்தை சேர்ந்தவர் உமையன் பாலன். இவரது மனைவி பிலவின்ராணி (வயது 35). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று பிலவின்ராணி ஜவுளிக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது கடை முன்பு காரில் மர்ம நபர் ஒருவர் வந்து இறங்கினார்.
பின்னர் அந்த நபர் ஜவுளிக்கடைக்குள் சென்று பிலவின்ராணியிடம் துணி வாங்குவது போல் பேச்சு கொடுத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர் மயக்கப் பொடியை பிலவின்ராணி மீது தூவினார். இதில் அவர் மயக்கம் அடைந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர் பிலவின்ராணி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு காரில் மாயமாகி விட்டார்.
மயக்கம் தெளிந்து எழுந்த பிலவின்ராணி தனது கழுத்தில் கிடந்த நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் சங்கராபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X