என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குளம் அருகே சிறுமியை திருமணம் செய்த பெயிண்டர் பெற்றோருடன் கைது
Byமாலை மலர்24 Jan 2021 7:56 AM GMT (Updated: 24 Jan 2021 7:56 AM GMT)
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த பெயிண்டரை பெற்றோருடன் போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது47). இவருக்கு மாரியம்மாள் (40) என்ற மனைவியும், இசக்கி முத்து (23) உள்பட 2 மகன்களும் உள்ளனர்.
இதில் 2-வது மகனான இசக்கிமுத்து பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 17-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியுடன் திருமணம் நடந்துள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட குழந்தைகள் நலபாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதியானது.
இதையடுத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சாவியே சிறுமியை திருமணம் செய்த இசக்கி முத்து மற்றும் அவரது பெற்றோர் முருகன்- மாரியம்மாள் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். இன்று மணமகன் உள்பட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது47). இவருக்கு மாரியம்மாள் (40) என்ற மனைவியும், இசக்கி முத்து (23) உள்பட 2 மகன்களும் உள்ளனர்.
இதில் 2-வது மகனான இசக்கிமுத்து பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 17-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியுடன் திருமணம் நடந்துள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட குழந்தைகள் நலபாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதியானது.
இதையடுத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சாவியே சிறுமியை திருமணம் செய்த இசக்கி முத்து மற்றும் அவரது பெற்றோர் முருகன்- மாரியம்மாள் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். இன்று மணமகன் உள்பட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X