search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீரை படத்தில் காணலாம்.
    X
    நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீரை படத்தில் காணலாம்.

    நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீரால் விவசாயம் பாதிப்பு

    நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீரால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நொய்யல்:

    நொய்யல் ஆறு கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் தொடங்கி திருப்பூர் மாவட்டம் வழியாக கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக சென்று காவிரியில் கலக்கிறது. நொய்யல் ஆற்றில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட சாயப் பட்டறைகளில் தேக்கி வைத்திருந்த சாயப்பட்டறை கழிவுநீரை ஒவ்வொரு முறையும் நொய்யல் ஆற்றில் மழை நீர் வரும் பொழுது மழை நீருடன் சாயக்கழிவு நீரை கலந்து விடுவது வழக்கம். இந்நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மழை பெய்தது. பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் மழைநீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இதை பயன்படுத்தி திருப்பூர் பகுதியை சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள் சாயக் கழிவுநீரை ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். இதனால் ஆற்றில் வரும் மழைநீர் சாயக்கழிவு உடன் சேர்ந்து வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் வருவதால் வெளியில் நொய்யல் ஆற்றில் செல்லும் கண்ணீர் சாயக்கழிவு நீர் காவிரியில் கலக்கும் போது காவிரி ஆற்றில் செல்லும் தண்ணீரை குடிநீராக செல்கிறது.

    நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் வருவதால் நொய்யல் ஆற்றிலிருந்து பாசனம் செய்யும் விவசாயிகள் இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் விவசாயப் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல் நொய்யல் ஆற்றை ஒட்டி உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளில் உள்ள குடிநீரும் சாயக்கழிவு நீரால் மாசுபட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காவிரி ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதால் காவிரி கரையோரம் உள்ள குடிநீர்டேங்க்களிலும், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீர் மாசுபடுகிறது.பொதுமக்கள் குழித்துச் செல்லும்போது உடலில் ஒரு விதமான அரிப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர். மேலும் தண்ணீரில் தொடர்ந்து குழித்து வந்தாலும், தண்ணீரை குடித்து வந்தாலும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வரும்.

    நொய்யல் ஆற்றில்வெள்ளப்பெருக்கு நீரை பரிசோதனை செய்தபோது உப்பின் தன்மை 2100 டிடிஎஸ் என உள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நீரை பரிசோதனை செய்தபோது உப்பின் தன்மை 68 டிடிஎஸ் என இருந்தது.நொய்யல் ஆற்றில் ஒவ்வொரு முறையும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஒவ்வொரு முறையும் திருப்பூரில் உள்ள சாயப் பட்டறைகளில் தேக்கி வைத்திருக்கும் சாயக்கழிவு நீரை திறந்து விடுகின்றனர். இதனால் தண்ணீரில் உள்ள உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் பணப் பயிர்கள் காய்ந்து விடும்.

    விவசாயம் செய்ய உகந்த தண்ணீர் அல்ல. எனவே மாவட்ட கலெக்டர் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பூர் சாயக் கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் மற்றும் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட நொய்யல் மற்றும் காவிரி ஆற்றுப் பாசன விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என நொய்யல் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×