search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விழுப்புரம் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று

    விழுப்புரம் மாவட்டத்தில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15, 137 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 112 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 14, 982 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 43 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் பாதிப்பு 15, 143 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
    Next Story
    ×