search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புளியங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

    புளியங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புளியங்குடி:

    புளியங்குடி சிந்தாமணி சான்றோர் மடத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் வாழவந்தான் (வயது 71). இவர் நேற்று அதிகாலை சிந்தாமணியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து விட்டு வீட்டிற்கு திரும்புவதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த பகுதியில் சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்த கருப்பையா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வாழவந்தான் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வாழவந்தான் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×