என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்23 Jan 2021 10:54 AM GMT (Updated: 23 Jan 2021 10:54 AM GMT)
திருவள்ளூர் அருகே சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர், ஒண்டிகுப்பம் சேரன்தெருவை சோ்ந்தவர் டில்லிபாபு (வயது 30). இவர் காக்களூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் தெருவில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி அன்று கடையிலிருந்து இரவு டில்லிபாபு வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி வீரலட்சுமி, கடைக்கு சென்று பார்த்தபோது, அவர் கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து டில்லி பாபுவின் மனைவி தனலட்சுமி (28) திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதைத்தொடந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த டில்லிபாபுவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X