என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அய்யம்பேட்டை அருகே சேலையில் தீப்பிடித்து பெண் பலி
Byமாலை மலர்23 Jan 2021 10:54 AM GMT (Updated: 23 Jan 2021 10:54 AM GMT)
அய்யம்பேட்டை அருகே சேலையில் தீப்பிடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி கீழத்தெரு ஜெயினுலாபுதீன் நகரைச் சேர்ந்தவர் பசீர் அகமது. இவரது மனைவி நபிசத்துல் முஸ்ரியா (வயது 33). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் உள்ள கியாஸ் அடுப்பில் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பரணில் இருந்த மண்எண்ணெய் கேன் அடுப்பின் மேல் விழுந்தது. இதில் தீ மளமளவென பரவி நபிசத்துல் முஸ்ரியா சேலையில் பிடித்தது. இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நபிசத்துல்முஸ்ரியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X