search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    பேராவூரணியில் டிராக்டர் மோதி பெண் பலி

    பேராவூரணியில் டிராக்டர் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேராவூரணி:

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியை சேர்ந்தவர் செல்வராணி(வயது53). இவரது மகன் தினேஷ்(30). இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் மோட்டர்சைக்கிளில் ஆவணம் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் ஜல்லிகளை ஏற்றி வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வராணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் தினேசை பேராவூரணியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பேராவூரணி போலீசில் செல்வராணி கணவர் மாமுண்டி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×