என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவல்லிக்கேணியில் காமதேனு சூப்பர் மார்க்கெட் உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை
Byமாலை மலர்23 Jan 2021 8:55 AM GMT (Updated: 23 Jan 2021 8:55 AM GMT)
சென்னை திருவல்லிக்கேணியில் காமதேனு சூப்பர் மார்க்கெட் உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை:
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டி.யு.சி.எஸ்.) மிக பழமையானது. இதன் மூலம் ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்தகங்கள், சமையல் கியாஸ் விற்பனை, பெட்ரோல் டீசல் விற்பனையகம் போன்றவை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் டி.யு.சி.எஸ். மூலம் நடைபெறும் சூப்பர் மார்க்கெட்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் படை நேற்று ஒரே நேரத்தில் 4 இடங்களில் சோதனை நடத்தியது. திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனர் அலுவலகம், சேப்பாக்கம் எல்.பி.ஜி. கியாஸ் விற்பனை மையம், தாம்பரம், பெரியார் நகர் டி.யு.சி.எஸ். கிளை வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் சேப்பாக்கம் கியாஸ் விற்பனை மையத்தில் பணியாற்றும் உதவி விற்பனையாளர் சரவணனிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 865 பறிமுதல் செய்யப்பட்டடது.
தாம்பரம், பெரியார் நகரில் இருந்து ரூ. 54,370 கைப்பற்றப்பட்டது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 235 பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.
டி.யு.சி.எஸ். விற்பனை மையங்களில் இருந்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டி.யு.சி.எஸ்.) மிக பழமையானது. இதன் மூலம் ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்தகங்கள், சமையல் கியாஸ் விற்பனை, பெட்ரோல் டீசல் விற்பனையகம் போன்றவை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் டி.யு.சி.எஸ். மூலம் நடைபெறும் சூப்பர் மார்க்கெட்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் படை நேற்று ஒரே நேரத்தில் 4 இடங்களில் சோதனை நடத்தியது. திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனர் அலுவலகம், சேப்பாக்கம் எல்.பி.ஜி. கியாஸ் விற்பனை மையம், தாம்பரம், பெரியார் நகர் டி.யு.சி.எஸ். கிளை வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் சேப்பாக்கம் கியாஸ் விற்பனை மையத்தில் பணியாற்றும் உதவி விற்பனையாளர் சரவணனிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 865 பறிமுதல் செய்யப்பட்டடது.
தாம்பரம், பெரியார் நகரில் இருந்து ரூ. 54,370 கைப்பற்றப்பட்டது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 235 பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.
டி.யு.சி.எஸ். விற்பனை மையங்களில் இருந்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X