search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சோளிங்கரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

    சோளிங்கரில் வேளாண்மை மசோதாவை திரும்பப் பெறக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேளாண்மை மசோதாவை திரும்பப் பெறக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கவுதம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சவுந்தர், நகர செயலாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் சுகுமாரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை பொது செயலாளர் டாக்டர் சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    Next Story
    ×