search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    வெள்ளகோவில் அருகே கார் மோதி முதியவர் பலி

    வெள்ளகோவில் அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே கோவை-திருச்சி ரோட்டில், ஓலப்பாளையம், ராம்நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது காங்கேயத்தில் இருந்து வெள்ளகோவில் நோக்கி வந்த கார் ஒன்று, முதியவர் மீது மோதியது. இந்த விபத்தில் முதியவருக்கு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்தில் பலியானார். ஆனால் அவர் யார்? எந்த ஊர்? என்று தெரியவில்லை.

    இது பற்றி தகவலறிந்த வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவர் உடலை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து இறந்தவர் யார் என்று விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×