என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Byமாலை மலர்22 Jan 2021 2:37 AM GMT (Updated: 22 Jan 2021 2:37 AM GMT)
ஒவ்வொரு டாஸ்மாக் கடை முன்பும் மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:
தஞ்சை பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரபிரியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் முதுகெலும்பாக டாஸ்மாக் மதுக்கடைகளின் வருமானம் உள்ளது. அங்கு விற்பனையாகும் மதுபானத்திற்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் நிர்ணய விலையை விட கூடுதலாக 10 ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. மதுக்கடைகளில் போலி மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. கோர்ட்டு உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளில் ரசீது வழங்கப்பட வேண்டும்.
ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு மதுக்கடையிலும் ரசீது வழங்கப்படுவதில்லை. மதுபானத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வசூல் செய்வதை தடுக்கவும், கணினிமயமாக்கப்பட்ட ரசீது வழங்கவும், போலி மது விற்பனையை தடுக்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மதுபான கடைகளின் விதிமுறைப்படி அங்கு விற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் ரசீது கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இதை முறைப்படி விற்பனை பிரதிநிதிகள் கடைப்பிடிப்பதில்லை. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்களும், வழக்குகளும் வருகின்றன. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் மது பானங்களுக்கு கண்டிப்பாக உரிய ரசீது வழங்க வேண்டும்.
மதுபான விலைப்பட்டியல் ஒவ்வொரு கடையின் முன்பு அனைவருக்கும் தெரியும்படி வைக்க வேண்டும். விற்பனை ரசீதுக்கான ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். இது முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று ஒவ்வொரு கடையிலும் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கோர்ட்டு உத்தரவுகளை பின்பற்றாத விற்பனை பிரதிநிதிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த உத்தரவு குறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக கோர்ட்டு உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். சுற்றறிக்கை அனுப்பியதற்கான ஆவணங்களையும், இது சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 6-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X