search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    திருப்பத்தூர் பகுதியில் 23-ந்தேதி மின் நிறுத்தம்

    திருப்பத்தூர் பகுதியில் 23-ந்தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டத்தில் திருப்பத்தூர், கொரட்டி, கந்திலி, குரிசிலாப்பட்டு, வெலக்கல்நத்தம் ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.

    எனவே மேற்கண்ட ஊர்களுக்கு உட்பட்ட சி.கே.ஆசிரமம், பொம்மிகுப்பம், திருப்பத்தூர் டவுன், குரிசிலாப்பட்டு, கொரட்டி, சுந்தரம்பள்ளி, பேராம்பட்டு, கந்திலி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக் கொட்டாய், காலேஜ், ஆசிரியர்நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருபனூர், ஆண்டியப்பனூர், மூலக்காடு, ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு, புங்கம்பட்டுநாடு, நெல்லிவாசல்நாடு மற்றும் ஜெயபுரம், சந்திரபுரம், வேப்பல்நத்தம், பையனப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூர், முகமதாபுரம், செட்டேரி டேம், சுண்ணாம்புகுட்டை, மல்லப்பள்ளி, ஏரியூர், அன்னசாகரம் ஆகிய ஊர்களிலும், அதைச் சுற்றி உள்ள கிராமங்களிலும் 23-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை திருப்பத்தூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ச.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×