search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருமணமாகி 19 வருடங்களாக குழந்தை இல்லாததால் இளம்பெண் தற்கொலை

    திருமணமாகி 19 வருடங்களாக குழந்தை இல்லாததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    பொள்ளாச்சி கூழனைக்கான்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 48). லாரி டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி (45). இவர்களுக்கு 19 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு வருடங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு சென்றனர்.

    அதன் பின்னர் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் குழந்தை குறித்து கேட்க தொடங்கினர். அதற்காக கணவன்- மனைவி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர்.

    மேலும் குழந்தை வரம் கேட்டு கோவில் குளங்களை சுற்றி கடவுளை வேண்டி வந்தனர். இவ்வாறு வருடங்கள் கடந்தது. திருமணமாகி 19 வருடங்களாக தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என பரமேஸ்வரி மனவேதனையுடன் இருந்து வந்தார்.

    தனது கணவர் மற்றும் தாயாரிடம் இதுகுறித்து அழுது புலம்பினார். அவர்கள் பரமேஸ்வரியை சமாதானப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×