என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்21 Jan 2021 10:03 AM GMT (Updated: 21 Jan 2021 10:03 AM GMT)
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்:
தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு உதவியாக இருக்கும் வகையில் இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. ஆனால் 2017-18-ம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மடிக்கணினி வழங்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது கொரோனா தொற்றில் நாடு சிக்கி இருக்கும் நிலையில் அரசு இணைய வழி கற்றலை மேற்கொள்ள வழிகாட்டியது.
அதேபோல் பள்ளி, கல்லூரிகளும் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகிறது. எனவே மடிக்கணினி வழங்காத மாணவர்களுக்கு வழங்கக்கோரி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்த்தி, தங்கராஜ், கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இலவச மடிக்கணினி வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X