என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- கோவை சிகாபுதீன் வீட்டில் லேப்டாப், சிம்கார்டு பறிமுதல்
கோவை:
குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) துப்பாக்கியால் சுட்டுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சமீம் (34), தவுபிக் (31) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கோவை போத்தனூர் திருமலை நகரை சேர்ந்த சிராஜூதீன் என்ற சிகாபுதீன் (39) என்பவர் 7-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இவர் கடந்த 6-ந் தேதி கத்தாரில் இருந்து சென்னை வந்த போது விமான நிலையத்தில் என்.ஐ.ஏ., போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று காலை என்.ஐ.ஏ., போலீசார் கோவை திருமலை நகரில் உள்ள சிகாபுதீன் வீட்டிற்கு சென்றனர். அங்கு 3 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து பென்டிரைவ், லேப்டாப், சிம்கார்டு, கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து என்.ஐ.ஏ., போலீசார் சிகாபுதீனுக்கு தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? தடை செய்யப்பட்ட அமைப்புகள் கொடுத்த உத்தரவை நிறைவேற்ற வில்சன் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்