search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    லாலாபேட்டை அருகே அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    லாலாபேட்டை அருகே மேட்டு திருக்காம்புலியூரில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    லாலாபேட்டை:

    லாலாபேட்டை அருகே மேட்டு திருக்காம்புலியூரில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நேற்று காலை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அங்கன்வாடி பணியாளர் வளர்மதி தலைமை தாங்கினார். ஜெயந்தி முன்னிலை வகித்தார். 

    அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியராக பணியில் அமர்த்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் பணி ஓய்வு கொடையாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
    Next Story
    ×