என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உக்கடம் லாரிபேட்டையில் ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல் - 2 பேர் கைது
Byமாலை மலர்21 Jan 2021 2:19 AM GMT (Updated: 21 Jan 2021 2:19 AM GMT)
உக்கடம் லாரி பேட்டையில் ரூ.1 லட்சம் மதிப்பில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை:
கோவை நகரில் பல்வேறு இடங்களில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் குட்கா அதிக அளவில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் ரோந்து சென்று குட்கா பதுக்கியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கோவைக்கு கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களிலிருந்து குட்கா மூட்டை, மூட்டையாக கொண்டுவரப்பட்டு கோவையில் குறிப்பிட்ட இடங்களில் குடோன்களில் பதுக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோவை உக்கடம் லாரி பேட்டையில் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக கோவை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான 24 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக குட்கா கடத்தி வந்த அப்பாஸ் (வயது38) மற்றும் ஜெய்லவுதீன்(56) ஆகிய இருவரை கைது செய்து உக்கடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை நகரில் பல்வேறு இடங்களில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் குட்கா அதிக அளவில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் ரோந்து சென்று குட்கா பதுக்கியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கோவைக்கு கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களிலிருந்து குட்கா மூட்டை, மூட்டையாக கொண்டுவரப்பட்டு கோவையில் குறிப்பிட்ட இடங்களில் குடோன்களில் பதுக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோவை உக்கடம் லாரி பேட்டையில் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக கோவை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான 24 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக குட்கா கடத்தி வந்த அப்பாஸ் (வயது38) மற்றும் ஜெய்லவுதீன்(56) ஆகிய இருவரை கைது செய்து உக்கடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X