search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருப்பூரில் தாயாருடன் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

    திருப்பூரில் பள்ளி செல்ல மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் தாயாருடன் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    அனுப்பர்பாளையம்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி முதலக்காம்பட்டியை சேர்ந்தவர் நாட்டரசன் (வயது 40). இவருடைய மனைவி மலர்கொடி (38). இவர்களது மகன் அபினேஷ் (19), மகள் பிரியதர்ஷினி (17). நாட்டரசன் தனது குடும்பத்துடன் திருப்பூர் பெரியார்காலனி கருப்பராயன் கோவில் வீதியில் வசித்து வருகிறார். மேலும் அவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். பிரியதர்ஷினி அவினாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இதற்கிடையில் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தனது மகளை பள்ளிக்கு செல்லுமாறு கூறி விட்டு, வழக்கம் போல் நாட்டரசன் வேலைக்கு சென்று விட்டார். அதன்பின்னர் தாயும், மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த மலர்கொடி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியதர்ஷினியும் விஷம் குடித்து விட்டு தன் தந்தைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதனால் பதறித்துடித்த நாட்டரசன், வீட்டுக்கு வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றார். அப்போது மலர்கொடி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து மயக்க நிலையில் இருந்த பிரியதர்ஷினியை மட்டும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரியதர்ஷினியை பரிசோதனை செய்த டர்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மலர்கொடிக்கும், அவருடைய மகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. இதற்கிடையில் நேற்று 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்த பள்ளிகள் திறந்த நிலையில், மாணவி பிரியதர்ஷினியை பள்ளிக்கு செல்லுமாறு அவருடைய தாயார் கூறியுள்ளார். ஆனால் பிரிதர்ஷினி பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். இதனால் தாய், மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த மலர்கொடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும், அதை தொடர்ந்து பிரியதர்ஷினியும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
    Next Story
    ×