
கோவையில் நேற்று மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,749 ஆக உயர்ந்து உள்ளது. கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 55 வயது ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் கோவையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 664 ஆக உயர்ந்தது. அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 98 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.