என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஏற்காட்டிற்கு வந்த தெலுங்கானா வாலிபர் திடீர் மரணம்
சேலம்:
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ராம்சந்த் கவுடா (வயது 30). இவருடன் ஒரே கல்லூரியில் படித்த 30 பேர் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றுலா வந்தனர். அவர்கள் அங்குள்ள பல்வேறு பகுதிகளை கடந்த 2 நாட்களாக சுற்றி பார்த்தனர்.
பின்னர் நேற்றிரவு அங்கு அறை எடுத்து தங்கினர். இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென ராம்சந்த் கவுடாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்