என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது- கல்வி அமைச்சகம் திட்டவட்டம்
Byமாலை மலர்20 Jan 2021 4:39 AM GMT (Updated: 20 Jan 2021 4:39 AM GMT)
நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது என கல்வி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னை:
கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான நீட், ஜே.இ.இ. தேர்வுகள் சற்று தாமதமாக நடத்தப்பட்டன. அதில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டுக்கான நீட், ஜே.இ.இ. தேர்வுகள் விரைவில் நடைபெற இருக்கின்றன.
கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களில் மாணவ-மாணவிகளின் சுமைகளை குறைப்பதற்காக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் நீட், ஜே.இ.இ. தேர்வுக்கான பாடத்திட்டங்களில் ஏதாவது மாற்றம் வருமா? என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் 2021-ம் ஆண்டு நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறது.
அதில் ஜே.இ.இ. தேர்வை பொறுத்தவரையில் முந்தைய ஆண்டு பாடத்திட்டத்தின்படியே தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கூடுதலாக விருப்பத்தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. அதன்படி, இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவில் இருந்து தலா 30 வினாக்கள் வீதம் 90 வினாக்கள் கேட்கப்படும் என்றும், அதில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் தலா 25 வினாக்கள் வீதம் 75 வினாக்களுக்கு பதில் அளித்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நீட் தேர்வு தொடர்பாக வினாக்கள் கேட்கப்படும் முறை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த தேர்வும் ஜே.இ.இ. தேர்வு போல விருப்பத்தேர்வுகளாக நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான நீட், ஜே.இ.இ. தேர்வுகள் சற்று தாமதமாக நடத்தப்பட்டன. அதில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டுக்கான நீட், ஜே.இ.இ. தேர்வுகள் விரைவில் நடைபெற இருக்கின்றன.
கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களில் மாணவ-மாணவிகளின் சுமைகளை குறைப்பதற்காக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் நீட், ஜே.இ.இ. தேர்வுக்கான பாடத்திட்டங்களில் ஏதாவது மாற்றம் வருமா? என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் 2021-ம் ஆண்டு நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறது.
அதில் ஜே.இ.இ. தேர்வை பொறுத்தவரையில் முந்தைய ஆண்டு பாடத்திட்டத்தின்படியே தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கூடுதலாக விருப்பத்தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. அதன்படி, இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவில் இருந்து தலா 30 வினாக்கள் வீதம் 90 வினாக்கள் கேட்கப்படும் என்றும், அதில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் தலா 25 வினாக்கள் வீதம் 75 வினாக்களுக்கு பதில் அளித்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நீட் தேர்வு தொடர்பாக வினாக்கள் கேட்கப்படும் முறை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த தேர்வும் ஜே.இ.இ. தேர்வு போல விருப்பத்தேர்வுகளாக நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X