search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சூளைமேட்டில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - திருமணம் நடைபெறாத விரக்தியில் சோக முடிவு

    திருமணம் நடைபெறாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    சென்னை:

    சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சம்பந்தம். இவரது மனைவி புஷ்பாவதி. இவரது மகள் யசோதா (வயது36). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து யசோதா மிகுந்த மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சம்பந்தம், அவரது மனைவி புஷ்பா ஒரு அறையிலும், யசோதா வழக்கம் போல் அவரது அறையிலும் தூங்கியுள்ளனர். இந்த நிலையில் திடீரென மகள் யசோதா அலறல் சத்தம் கேட்கவே சம்பந்தம் ஓடிச் சென்று பார்த்துள்ளார்.

    அப்போது யசோதா மண்ணெண்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, தீக்காயம் அடைந்த நிலையில் கிடந்த அவரை மீட்டு அங்குள்ளவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இந்தநிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×