என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வையம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பாதயாத்திரை சென்ற பக்தர் பலி
Byமாலை மலர்19 Jan 2021 12:01 PM GMT (Updated: 19 Jan 2021 12:01 PM GMT)
வையம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பாதயாத்திரை சென்ற பக்தர் பலியானார்.
வையம்பட்டி:
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள மேலபுதுவயல் பகுதியைச் சேர்ந்த சுமார் 25 பேர் பழனி முருகனுக்கு மாலையிட்டு விரதமிருந்து பாதயாத்திரையாக பழனி நோக்கி புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (வயது 24) என்பவரும் சென்று கொண்டிருந்தார். நேற்று அதிகாலை திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே ஆசாத்ரோடு என்ற இடத்தில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை குழுவினர் சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த பன்னபட்டியைச் சேர்ந்த ஆரோக்கியம் (36) ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நாகராஜன் மீது மோதியது.
இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் இருவரையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு நாகராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X