என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நித்திரவிளை அருகே தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை
Byமாலை மலர்19 Jan 2021 11:32 AM GMT (Updated: 19 Jan 2021 11:32 AM GMT)
நித்திரவிளை அருகே திருமணத்துக்கு வற்புறுத்தியதால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே கலியங்காராஜபுரத்தை சேர்ந்தவர் சோமன். இவருடைய மகன் கிரண் (வயது 27). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். கிரண் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, அவரது பெற்றோர் வேெறாரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக கேரளாவில் பெண் பார்த்து வந்தனர். இதற்கு கிரண் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மேலும், உறவினர்களுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்ட பின் தனது அறைக்கு தூங்கச் சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது தாயார் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து பார்த்தார். அப்போது, அறையில் கிரண் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். அவரது சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர், இதுகுறித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் நித்திரவிளை இன்ஸ்பெக்டர் ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிரணின் பிணத்ைத கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணத்துக்கு வற்புறுத்தியதால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X