search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கரூர் அருகே லாரி கிளீனர் தூக்குப்போட்டு தற்கொலை

    கரூர் அருகே லாரி கிளீனர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் அருகே உள்ள புலியூர் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 21). லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், கடந்த ஒரு மாதமாக மதன்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து மதன்குமாரை அவரது தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட மதன்குமார் நேற்று முன்தினம் வெள்ளாளப்பட்டியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அப்பகுதியினர் பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மதன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×