என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி தனியார் நிறுவன பணியாளர் பலி
Byமாலை மலர்19 Jan 2021 9:28 AM GMT (Updated: 19 Jan 2021 9:28 AM GMT)
மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி தனியார் நிறுவன பணியாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனி அருகேயுள்ள அமரபூண்டி எவிசன்நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 30). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். ஆயக்குடியை அடுத்த ரூக்குவார்பட்டி பகுதியில் வந்தபோது, அந்த வழியாக சென்ற வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரபு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபுவின் மோட்டார்சைக்கிள் மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X